0 0
Read Time:2 Minute, 2 Second

கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தமது சொந்த செலவில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் இரண்டு பிராணவாயு செறிவூட்டிகளை (oxygen concentrator) ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வர்(Dean office) அலுவலகத்தில் சிதம்பரம் சார் ஆட்சியர் எல்.மதுபாலன் இ.ஆ.ப., மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஞானதேவன், முன்னாள் புல முதல்வர் டாக்டர்.ராஜ்குமார், முன்னாள் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.சண்முகம், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர்.அசோக் குமார், டாக்டர். செந்தில்வேலன், டாக்டர். ரமேஷ், டாக்டர். மணவாளன், டாக்டர்.பாலாஜி சுவாமிநாதன், டாக்டர்.தட்சிணாமூர்த்தி, டாக்டர்.ராமநாதன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர்.ஜெயஸ்ரீ, டாக்டர்.கிருஷ்ணசாமி, டாக்டர். கவியரசன், டாக்டர்.சாமிநாதன், டாக்டர்.லாவண்யா குமாரி, டாக்டர்.வனிதா சாமுவேல், டாக்டர்.சாந்தா கடலூர் கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.எஸ்.என். குமார் மாவட்ட மாணவர் அணி பொருளாளர் சங்கர் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %