0 0
Read Time:1 Minute, 52 Second

சிதம்பரம்: அருகே விபத்தில் சிக்கிய முதலை சாவு. வனப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவில் இன்று அதிகாலை சுமார் எட்டு அடி நீளமுள்ள 80 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று கிராமத்துக்குள் நுழைந்ததை அடுத்து அந்த முதலையை பொதுமக்கள் பிடித்து பரங்கிப்பேட்டை போலீசாருக்கு கொடுத்த தகவல்கள் பேரில் முதலையை மீட்ட பரங்கிப்பேட்டை போலீசார் நிலையம் கொண்டு சென்ற பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் உயிர் இழந்த நிலையில் இருந்த முதலையை பி.முட்லூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு உடற்கூறு பரிசோதித்த நடத்தப்பட்டது மருத்துவர் கோகுல்நாத் முதலை சாலை விபத்தில் உயிர் எழுந்திருக்கக் கூடும் என தெரிவித்ததையடுத்து உடற்கூறு சோதனைக்கு பின்னர் அதனை பாதுகாப்பான முறையில் கிள்ளை அடுத்த காப்புக்காடு வனப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது இந்நிகழ்வில் வனவர் அஜிதா தலைமையில் வனக் காப்பாளர் சரளா வனக்காவலர்கள் செந்தில்குமார் புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %