0 0
Read Time:1 Minute, 35 Second

புவனகிரி: பவர் ஃபேதர்ஸ் ஆற்றல் இறகுபந்து உள்விளையாட்டரங்கம் சார்பாக சுகாதார காவலர்களுக்கு நிவாரணம் வழங்கல்!

கடலூர் மாவட்டம் புவனகிரி பவர் ஃபேதர்ஸ் இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம் சார்பாக தங்கள் இன்னூயிரை பணயம் வைத்து பொருந்தொற்று காலத்தில் புவனகிரி பேரூராட்சியில் பணிபுரியும் சுகாதார காவலர்களுக்கு அரிசி, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருள்களை புவனகிரி காவல் ஆய்வாளர் ராபின்சன் தலைமையில் வழங்கினர்.

புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஷ்வரன், ராமலிங்கம் ,கிருஷ்ணசாமி,உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளாராக அரிமா சங்க மாவட்ட தலைவரும் புவனகிரி வர்த்தக சங்க செயலாளருமான ஏ.சி.பி.இரத்தினசுப்பிரமணியன் கலந்து கொண்டு நிவாரணம் வழங்கினார். மேலும் பவர் ஃபேதர்ஸ் உறுப்பினர்கள் ஆர்.பி.சண்முகம்,சரவணன்,மகாலிங்கம், ஏ.சி.பி.ஆர்.கார்த்திகேயன், ராமநாதன்,ரமேஷ்,ஜெகநாதன்,பாலு,கதிர்,சண்முகம்,உமர்,தாமரைச்செல்வன்,பொன்செல்வம்,ஜெயபிரகாஷ்,வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %