கம்பம் வின்னர் ஸ்போர்ட்ஸ் மற்றும் பசியில்லா கம்பம் சார்பாக முதியோர்கள் மற்றும் விதவைகள் மொத்தம் 40 நபர்களுக்கு அரிசி மற்றும் இதர பொருட்கள் வழங்கல்!
கம்பம் வின்னர் ஸ்போர்ட்ஸ் மற்றும் பசியில்லா கம்பம் சார்பாக முதியோர்கள் மற்றும் விதவைகள் மொத்தம் 40 நபர்களுக்கு அரிசி மற்றும் இதர பொருட்கள் வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை உத்தமபாளையம் DSP சின்னக் கண்ணு முன்னிலையும், கம்பம் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அண்ணன் சிலை மணி மற்றும் பாரதி தமிழ் இலக்கிய பேரவை அண்ணன் பாரதன், நேதாஜி அறக்கட்டளை அண்ணன் பஞ்சுராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி நடைபெற உதவிய புரிந்த அசென்ட் அகாடமி பள்ளி முதல்வர் ஜியாவுல்ஹக் மற்றும் சுபாஷினி தேனி முதன்மை கல்வி அலுவலர் மற்றும் சிவக்குமார் திண்டுக்கல் கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் மற்றும் கௌரி சங்கர் செந்தில் கம்பம் சமூக ஆர்வலர் மாமா தயாளன் ,தேனீக்கள் அறக்கட்டளை
ஆசிரியர் பாண்டி, ஆசிரியர் அழகேசன், இரும்பு கடை தீன் மாமு, பாளையம் அகமது கபீர் ,EMS அப்தாஹீர்,ஆசிக் கான்,ஹஜ் முகமது,உதுமான் அலி,பீர் ஒலி,இர்ஷாத் தமுமுக,பகாத்,அமீர் கான் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.
செய்தி: தஞ்சை விஜய்