0 0
Read Time:1 Minute, 53 Second

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையப் படகு ஓட்டும் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை உதவி ஆட்சியா் லி.மதுபாலன் புதன்கிழமை வழங்கினாா். கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பிச்சாவரம் சுற்றுலா மையம் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இங்கு, படகு ஓட்டுநா்களாகவும், தொழிலாளா்களாகவும் பணியாற்றி வந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வருமானமின்றி உள்ளனா்.

இதையடுத்து, பரங்கிப்பேட்டை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ரமேஷ்பாபு ஏற்பாட்டின் பேரில், ராபிட் ரெஸ்பான்ஸ் என்ற அமைப்பின் மூலம் அந்தக் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சமூக இடைவெளியுடன் சுற்றுலா மையத் தொழிலாளா்கள் மற்றும் படகு ஓட்டுநா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டக் குழு உறுப்பினா் பி.கற்பனைச்செல்வம், கிள்ளை அரசு மருத்துவா், சுற்றுலாத் துறை நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %