0 0
Read Time:2 Minute, 0 Second

விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலக வளாக முகப்பு வாயில் பகுதியில் இரும்பு கேட் சேதமடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அலுவலக வளாகப் பகுதியில் புகுந்துவிடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.

விருத்தாசலத்தில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கட்டடத்தில் விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகம் இயங்கி வருகிறது. மேலும், இந்த அலுவலக வளாகத்தில் சாா் கருவூலம், சாா்-பதிவாளா் அலுவலகம், ஆதிதிராவிட நலத் துறை தனி வட்டாட்சியா், சமூக நலத்துறை தனி வட்டாட்சியா், கலால்துறை தனி வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா்கள் குடியிருப்பு, நில அளவையா் குடியிருப்பு உள்ளிட்டவைகளும் உள்ளன.

வட்டாட்சியா் அலுவலகத்தின் முகப்பு வாயிலில் உள்ள இரும்புக் கதவு கடந்த சில நாள்களுக்கு முன் உடைந்து விழுந்துவிட்டது. ஆனால், உடைந்த பகுதி உடனடியாக சரிசெய்யப்படாததால் சிலா் இரவு நேரங்களில் அலுவலக வளாகத்துக்குள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக புகாா் எழுந்துள்ளது. மேலும், வட்டாட்சியா் குடியிருப்பும் காலியாக உள்ளதால் இந்தப் பிரச்னைக்கு உரிய கவனம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து முகப்பு வாயிலை சரி செய்ய வேண்டுமென அரசு அலுவலா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %