0 0
Read Time:3 Minute, 0 Second

இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூ 50,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்!.

நாட்டு மக்களிடையே நேற்று முன் தினம் உரையாற்றிய பிரதமர் மோடி, தீபாவளி வரை ரேஷனில் இலவச தானியங்கள் வழங்கப்படும். இதன் மூலம் நவம்பர் மாதம் வரை 80 கோடி குடும்பங்கள் பலனடையும் என்றார்.

இதுஒருபுறமிருக்க, இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூ 50,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 30 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகள் இந்தியா மற்றும் அதன் பண்பாட்டை உலக அளவில் அறியும்படி இலக்கியப் படைப்புகளாக மாற்றுவதற்கு இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் வரும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 75 இளம் எழுத்தாளர்கள் இத்திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக தேர்வு செய்யப்படும் 75 இளம் படைப்பாளிகளுக்கு 6 மாத காலத்திற்கு மாதம் தோறும் 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

  • இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவால் இந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
  • இந்த போட்டி ஜூன் 4 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்
  • வழிகாட்டல் திட்டத்தின் கீழ் முறையான புத்தகமாக உருவாக்கும் பொருட்டு, போட்டியாளர்கள் 5,000 சொற்கள் அடங்கிய கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களின் பெயர்கள் 2021 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளார்கள் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டிகளின் வழிகாட்டுதலின் கீழ் இறுதித் தேர்வுக்கான பிரதிகளைத் தயாரிப்பார்கள்
  • வெற்றியாளர்களின் பதிப்புகள் 2021 டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்
  • வெளியிடப்பட்ட புத்தகங்கள் 2022 ஜனவரி 12 ஆம் தேதியன்று தேசிய இளைஞர் தினத்தில் தொடங்கப்படும்.

For further details:https://innovateindia.mygov.in/yuva/

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %