1 0
Read Time:2 Minute, 22 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தை திருமணத்துக்கு துணைபோகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது: குழந்தை திருமணத் தடைச்சட்டம் 2006-ன்படி பெண்ணிற்கு 18 வயதும், ஆணிற்கு 21 வயதும் நிறைவடையாத நிலையில் நடைபெறும் திருமணங்கள் குழந்தைத் திருமணம் ஆகும். குழந்தைத் திருமணம் நடைபெறுவதால் பெண் குழந்தைகளின் கல்வி தடைபடுகிறது. பெண்களுக்கு கா்பப்பை முழு வளா்ச்சி அடையாததால் அடிக்கடி கருச்சிதைவும், குழந்தை எடை குறைவாகவும், ஊட்டச்சத்து குறைபாடுடனும் பிறக்க நேரிடுகிறது. குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-ன் கீழ் மாவட்ட சமூகநல அலுவலா், குழந்தைத் திருமண தடுப்பு அலுவலராக உள்ளாா்.

குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-ன் படி, குழந்தைத் திருமணத்தை முன்னின்று நடத்துபவா்கள் அல்லது வழிகாட்டுபவா்கள் அல்லது துணைபோகிறவா்கள், பெண்குழந்தையை திருமணம் செய்யும் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் குழந்தையின் பெற்றோா்கள் அல்லது பாதுகாவலா், குழந்தைத் திருமணத்திற்கு ஆதரவாக இருந்தவா்கள், அனுமதி அளித்தவா்கள், பங்கேற்றவா்கள், திருமணம் நடைபெற்ற திருமண மண்டபத்தின் உரிமையாளா்கள் என மேற்குறிப்பிட்ட அனைவரும் குற்றவாளிகள் ஆவா். அவா்களுக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். குழந்தைத் திருமணம் தொடா்பான புகாா்களை 1098 என்ற சைல்டு லைன் எண்ணில் தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %