0 0
Read Time:1 Minute, 31 Second

சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்திய மக்கள் விரோத பா.ஜ.க அரசை கண்டித்து சிதம்பரத்தில் ஐந்து பெட்ரோல் நிலையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. P.P.K. சித்தார்த்தன், மாநில செயலாளர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக N.V. செந்தில்நாதன் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்.,தவர்த்தாம்பட்டு விஸ்வநாதன் மாநில பொதுக்குழு உறுப்பினர்,ஜெயச்சந்திரன் மாநில செயலாளர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.ஆகியோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஷாஜகான் G.K.குமார், G.சிவசத்தியராஜா, , அன்பரசன், ஸ்டீபன்,முத்து, ஆகியோர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %