0 0
Read Time:1 Minute, 40 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகின்றது. இந்த தருணத்தில் நெல் சாகுபடிக்கு வயல் தயார் செய்து தருவதற்கு டாபே நிறுவனம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வயல்களை இலவசமாக உழுது தர முன்வந்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகளின் விளைநிலம் 2 ஏக்கருக்கு குறைவாக இருக்க வேண்டும். பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார் கார்டு நகல், 2 ஏக்கர் அல்லது அதற்கு குறைவாக உள்ள நிலப்பரப்பின் பட்டா நகல் கொடுக்க வேண்டும்.

இந்த இலவச வாடகை உழவு திட்டத்தினை அருகாமையில் உள்ள டாபே மற்றும் ஈச்சர் டிராக்டர் வைத்துள்ள உரிமையாளர்கள் மூலம் டாபே நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருவதால் பதிவு செய்த அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் டாபே நிறுவனத்தின் இலவச தொலைபேசி எண்: 18002084242 / 18004200100 அல்லது 9500691658 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடையும்படி மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %