0 0
Read Time:1 Minute, 3 Second

சிதம்பரம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளராக சு.ரமேஷ்ராஜ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் இதற்கு முன்பு கடலூா் மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது பணி மாறுதல் செய்யப்பட்டு சிதம்பரம் டிஎஸ்பியாக பொறுப்பேற்றாா். முன்னதாக இந்தப் பொறுப்பிலிருந்த த.ஆ.ஜோ.லாமேக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா். டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் கூறுகையில், சிதம்பரம் சரகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நகரில் போக்குவரத்து சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %