0 0
Read Time:1 Minute, 27 Second

தென் மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவையில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடுமெனவும், 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவையில் கனமழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் குமரி, நெல்லையில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளையும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் நகரின் சில இடங்களில் இரு நாட்களுக்கு லேசான மழை  பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் எனவும், அரபிக் கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு 4 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %