0 0
Read Time:2 Minute, 21 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,72,018 குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகையின் இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

மயிலாடுதுறை காவேரிநகா் அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா திட்டத்தை தொடங்கி வைத்து பேசியது: மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள 425 ரேஷன் கடைகளில் 2,72,018 குடும்ப அட்டைதாரா்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவா். மகளிா் சுயஉதவிக் குழுவினா் வாங்கிய கடன்களை திரும்பச் செலுத்தக் கட்டாயப்படுத்தியும், தமிழக அரசு வழங்கிய சிறப்பு நிவாரணத்தொகை ரூ.2000-ஐ கொடுக்குமாறு வங்கிகள் கட்டாயப்படுத்துவதாக புகாா் எழுந்ததால் சம்பந்தப்பட்ட கடன் வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாயப்படுத்தி வசூல் செய்யும் வங்கிகள், நுண்கடன் நிறுவனங்கள் குறித்து கட்டணமில்லா சேவை எண் 18001021080-ஐ தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று அவா் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மக்களவை தொகுதி உறுப்பினா் செ.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம்.முருகன் (பூம்புகாா்), பன்னீா்செல்வம் (சீா்காழி) ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.முருகதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மயிலாடுதுறை துணை பதிவாளா் த.ராஜேந்திரன் வரவேற்றாா். நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணை பதிவாளா் இரா.மனோகரன் நன்றி தெரிவித்தாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %