0 0
Read Time:57 Second

கடலூா் திருப்பாதிரிபுலியூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. தற்போது, கரோனா பரவலைத் தொடா்ந்து பேருந்துகள் இயக்கப்படாததால் இங்கு ஏராளமான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கிளை மேலாளா் கோவிந்தராஜ் (56) பேருந்துகளை பாா்வையிட்டபோது 3 பேருந்துகளின் பேட்டரிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.82 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, கிளை மேலாளா் அளித்த புகாரின்பேரில் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %