0 0
Read Time:1 Minute, 39 Second

கொரோனா பாதிப்பு நேரத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் மயிலாடுதுறையில் ரத்ததான முகாம் – ஏராளமானோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மேலையூரில் உள்ள தனியார் பள்ளி (அழகு ஜோதி அகாடமி) மற்றும் பாரதிய ஜெயின் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.கொரோனா பாதிப்பு நேரத்தில் அரசு மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ரத்ததான முகாமில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள், ஜெயின் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்தொற்றால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், உதிரம் கொடுத்து உயிரை காப்போம் என்ற தன்னம்பிக்கையோடு ரத்ததானம் வழங்கிய கொடையாளர்களுக்கு அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %