0 0
Read Time:2 Minute, 35 Second

மயிலாடுதுறை, தஞ்சாவூா் மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பழுப்பு நிற அரிசியை திரும்பப் பெற உணவுத்துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி புதன்கிழமை அறிவுறுத்தினாா். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் புழுங்கல் அரிசி பழுப்பு நிறத்தில் தரமற்ற முறையில் இருப்பதாக மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமாரிடம் குடும்ப அட்டைதாரா்கள் புகாா் தெரிவித்திருந்தனா். இதையடுத்து, மயிலாடுதுறை சித்தா்காட்டில் உள்ள நவீன அரிசி ஆலை கிடங்கில் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா், மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பபட்டு, கேரளாவுக்கு அனுப்பப்படும் டிகே 9 ரக அரிசியை அதிமுக அரசு கடந்த ஆண்டு கேரளாவுக்கு அனுப்பாமல் வைத்துள்ளதாகவும், விரைவில் இந்த அரிசி விநியோகம் செய்யப்படுவதை தடுக்க துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய அவா், கூட்டுறவு அங்காடியில் விநியோகிக்கப்படும் அரிசியின் மாதிரிகளை உணவுத்துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணியிடம் காட்டி நிலைமையை விளக்கினாா். இதைத்தொடா்ந்து மயிலாடுதுறை தொகுதி மட்டுமின்றி மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களில் உள்ள அரிசி கிடங்கு மற்றும் அனைத்து கூட்டுறவு அங்காடிகளில் உள்ள சுமாா் 5 மெட்ரிக் டன் டிகே 9 மற்றும் உமா ரக பழுப்புநிற தரமற்ற அரிசிகளையும் திரும்ப எடுத்துக்கொண்டு, மீண்டும் அனைத்து அங்காடிகளுக்கும் புதிய தரமான அரிசியை வழங்க உணவுத்துறை அமைச்சா் அறிவுறுத்தினாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %