0 0
Read Time:1 Minute, 19 Second

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சேதமடைந்த ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியை இடிக்க உத்தரவு கிடைத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பை அடுத்த சந்தைதோப்பு பகுதியில் அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதி இயங்கி வருகிறது. 35 ஆண்டுகள் பழமையான இக்கட்டிடம் சேதமடைந்து, சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழும் சூழலில் உள்ளது. சுமார் 300 மாணவர்கள் தங்கக்கூடிய இந்த விடுதியை, பாதுகாப்பு கருதி இதை இடித்துவிட்டு புதிதாக கட்ட உத்தரவு கிடைத்துள்ளது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால், விடுதி இன்னும் இடிக்கப்படாமல் உள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, உடனடியாக விடுதியை இடித்துவிட்டு புதிய விடுதி கட்ட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %