0 0
Read Time:1 Minute, 33 Second

மயிலாடுதுறை அருகே ஆலங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியன் மகன் முத்துக்குமார் (வயது 34). அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் முத்துக்குமார் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் அவர் தோல்வியடைந்து பணத்தை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் முத்துக்குமாருக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது முத்துக்குமாரை அவரது நண்பர்கள் உருட்டுக்கட்டையாலும், இரும்பு கம்பியாலும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த முத்துக்குமார் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறி்த்து முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆலங்குடி வடக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் சிம்சன் (39). இவருடைய சகோதரர் மணிகண்டன் (29) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சூர்யா, செல்வம் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %