0 0
Read Time:1 Minute, 46 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆறுகள், வாய்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியன 431 கி.மீட்டர் தூரத்துக்கு முதல்-அமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் தற்போது தூர்வாரப்படுகிறது. இதற்காக ரூ.5 ேகாடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதம் 28-ந் தேதி பொக்லின் எந்திரம் கொண்டு தூர்வாரும் பணிகள் தொடங்கியது.


இந்த பணிகளை மேட்டூரில் திறக்கப்படும் காவிரி நீர் வந்தடைவதற்கு முன்னதாக முடிக்க திட்டமிடப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகிறது.இந்த திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை அருகே திருவிழந்தூரில் அருங்காடு வடிகால் வாய்க்கால் 25 ஆண்டுகளுக்கு பிறகு பொதுப்பணித்துறை மூலம் தற்போது தூர்வாரப்படுகிறது.


இந்த வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததால் மழை காலங்களில் மழை நீர் வடியாமல் 200 ஏக்கர் பாதிக்கப்பட்டு வந்தது.இந்தநிலையில் தற்போது அருங்காடு வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுவதால் விளை நிலங்கள் பாதிக்காத வகையில் மழைநீர் வடிய ஏற்பாடு செய்தமைக்காக தமிழக அரசுக்கும், பொதுப்பணித்துறைக்கும் அந்த பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %