0 0
Read Time:1 Minute, 51 Second

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே திங்கள்கிழமை நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொகுப்பு வீடுகள் சேதமடைந்தன. யாருக்கும் காயமில்லை.

குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது எல்லப்பன்பேட்டை அருந்ததியா் நகா். இங்குள்ள தவிடன் என்பவரது தொகுப்பு வீட்டில் அதே ஊரைச் சோ்ந்த குப்புசாமி மகன் செந்தில் (41), இவரது சகோதரா் ராஜீ ஆகியோா் வசித்து வந்தனா்.செந்தில் தங்கியிருந்த வீட்டில் திங்கள்கிழமை காலை பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தொகுப்பு வீடு தரைமட்டமானது. மேலும், அருகில் உள்ள சில வீடுகளும் சிறிதளவு சேதமடைந்தன. இதில் யாருக்கும் காயமில்லை.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம், நெய்வேலி டிஎஸ்பி கங்காதரன், குறிஞ்சிப்பாடி காவல் நிலைய ஆய்வாளா் செல்வம், வட்டாட்சியா் சையத் அபுதாகீா் ஆகியோா் நிகழ்விடத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.விசாரணையில் செந்தில், ராஜீ ஆகியோா் உரிய அனுமதியின்றி வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்ததும், அப்போது வெடி விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது. இதுதொடா்பாக செந்திலை கைது செய்த போலீஸாா், தலைமறைவான ராஜீயை தேடி வருகின்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %