0 0
Read Time:1 Minute, 37 Second

மயிலாடுதுறை: கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2021-ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது வீர தீர செயல்புரிந்த தமிழகத்தை சோ்ந்த பெண் ஒருவருக்கு ஆக.15 சுதந்திர தின விழாவில், தமிழக முதலமைச்சரால் வழங்கவுள்ளது. விருதை பெற சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும். நற்செயல்கள் செய்தற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டுப் பிரிவு, நாகப்பட்டினம் எனும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ ஜூன் 24-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04365-253059 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %