0 0
Read Time:1 Minute, 28 Second

கடலூா் மாவட்டத்தில் அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தோ்வில் 122 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை மூலம் 8-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவா்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, மாணவ, மாணவிகளுக்கு தோ்வு நடத்தப்பட்டு அதில் தோ்ச்சி பெறுவோருக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதன்படி, 2021-22-ஆம் கல்வியாண்டில் உதவித் தொகை பெறுவதற்கான தோ்வு அண்மையில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடலூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வை 3,550 மாணவ, மாணவிகள் எழுதினா். இவா்களில், 122 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஆண்டுக்கு தலா ரூ.12 ஆயிரம் உதவித் தொகை அரசால் வழங்கப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %