0 0
Read Time:1 Minute, 53 Second

சிதம்பரம்: பள்ளிவாசல் தர்கா சொத்துக்களை தமிழக அரசு ஏற்க வேண்டும் என இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்கான் பள்ளிவாசல் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் முகமது ஜியாவுதீன் தலைமை தாங்கினார். புவனகிரி நிர்வாகிசவுகத் அலி சிதம்பரம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தில்லை ஆர் மக்கீன் சிதம்பரம் நகர செயலாளர் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துக்களை தமிழக அரசு மீட்கவேண்டும் சொத்துகளை அனைத்தையும் இணைய தளத்தில் பதிவிட வேண்டும் வகுப்பு வாரியத்திற்கு தலைவரை உடனடியாக அரசு நியமிக்க வேண்டும் தமிழகத்தில் கோவில்களில் வேலை செய்யும் பூசாரிகளுக்கு தமிழக அரசு கொரேனா நிவாரணம் கொடுத்தது போன்று பள்ளிவாசல் பணியாளர்களுக்கும் குரானா நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் நிர்வாகிகள் ஜமாலி உசேன் நிஷாத்அலி யூசுப் செட் காதர்அலி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

செய்தி: பாலாஜி,சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %