0 0
Read Time:1 Minute, 34 Second

பூம்புகாா் அருகே வானகிரி மீனவா் கிராமத்தில் மீன் உலா்களம் கட்டும் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

வானகிரி மீனவா் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வசித்து வருகின்றனா். இவா்கள், மீன் உலா்களம் அமைத்துதரவேண்டுமென சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரனிடம் கோரிக்கை விடுத்தனா். இதைத்தொடா்ந்து, மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பில் வானகிரி மீனவா் காலனியில் மீன் உலா்களம் அமைக்க ஏற்பாடு செய்தாா். அதன்படி, மீன் உலா்களம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) கஜேந்திரன், திமுக பொதுக் குழு உறுப்பினா் முத்துமகேந்திரன், ஒன்றியச் செயலாளா் சசிக்குமாா், மாவட்ட கவுன்சிலா் ஆனந்தன், ஊராட்சித் தலைவா் நடராஜன், கிராம பஞ்சயாத்தாா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %