0 0
Read Time:1 Minute, 46 Second

கடலூர் : நகராட்சிக்கு வாடகை செழித்ததாத கடைகளுக்கு சீல்!. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு!

கடலூர் மாவட்டத்தில் அந்த நகராட்சிக்கு சொந்தமாக உள்ள 121 கடைகளுக்கு வியாபாரிகள் வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் அந்த நகராட்சிக்கு 3 கோடிக்கும் மேலாக வாடகை பாக்கி உள்ளது. எனவே அந்த கடைகளுக்கு சீல் வைக்க ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி வருவாய் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் போன்றோர் அந்தப் பகுதியிலுள்ள இனிப்பு கடை மற்றும் செருப்பு கடை ஆகியவற்றை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

இதனையடுத்து இனிப்பு கடைக்காரருக்கு 54 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியும், செருப்பு கடைக்காரருக்கு 64 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியும் இருந்துள்ளது. மேலும் இந்த இரண்டு கடைக்காரர்களும் கடந்த சில ஆண்டுகளாகவே வாடகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மற்ற கடை உரிமையாளர்களும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகை மற்றும் வரியை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் அப்படி இல்லை என்றால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %