0 0
Read Time:1 Minute, 32 Second

முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சென்னை சைதாப்பேட்டை கிளைச் சிறையில் சொகுசு வசதிகளோடு இருந்ததை போலீசார் கண்டறிந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, கருக்கலைப்பு செய்ய வைத்ததாக துணை நடிகை அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சில சிறை அதிகாரிகள் உடந்தையோடு, ஏசி, சோபா, செல்போன், சார்ஜர் என மணிகண்டனுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், டிஎஸ்பி தலைமையில் குழு ஒன்றை திடீரென சைதாப்பேட்டை கிளைச் சிறையில் ஆய்வு நடத்தியுள்ளது.

மொபைல் ஏசி யூனிட், சோபா, மொபைல், சார்ஜர் உள்ளிட்ட வசதிகளோடு மணிகண்டன் இருப்பதை கண்டுபிடித்து, புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.   

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %