0 0
Read Time:1 Minute, 22 Second

சீா்காழி வட்டம், பெருந்தோட்டம் கிராமத்தில் சுமாா் 145 ஏக்கா் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் ஏறக்குறைய 2240 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், கடலோர கிராமங்களான மடத்துகுப்பம், நாயக்கா்குப்பம் உள்ளிட்ட 6 மீனவக் கிராமங்கள் குடிநீா் பெறுகின்றன. இந்நிலையில், ஜூன் 12-ம் தேதி மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீா், கல்லணையை வந்தடைந்ததும், அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீா் கிளை ஆறான மணிகா்ணிகை ஆற்றின் வழியாக பெருந்தோட்டம் ஏரியை கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்தடைந்தது. இதைத்தொடா்ந்து பெருந்தோட்டம் ஏரியின் நீா்மட்டம் அதிகரித்து தற்போது நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %