0 0
Read Time:1 Minute, 6 Second

மயிலாடுதுறை அருகே சிறுமியை கடத்திச்சென்ற வாலிபரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மயிலாடுதுறை அருகே கிடாரங்கொண்டான் திருமேனியார்கோயிலை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் 8-ஆம் வகுப்பு படித்துவரும் 14 வயது சிறுமியிடம் நெருங்கி பழகியுள்ளார். இந்நிலையில் ஆகாஷ் சிறுமியை கடத்தி சென்றதாக அவரது பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி சிறுமியை மீட்டதுடன், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து ஆகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %