0 0
Read Time:1 Minute, 28 Second

கடலூர்: சிதம்பரத்தில் கஞ்சா, லாட்டரி விற்பனை மற்றும் ரவுடிகளை பிடிக்க தனிப்படை!. காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் அறிவிப்பு!

கடலூர்: சிதம்பரத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் கூறுகையில், சிதம்பரம் பகுதியில் கஞ்சா மற்றும் லாட்டரி விற்பனை செய்பவர்களை மற்றும் ரவுடிகளை பிடித்து தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது பொதுமக்கள் தங்கள் புகார்களை சிதம்பரம் துனை போலீஸ் சூப்பிரண்ட் 9498154802 மற்றும் சிதம்பரம் நகர ஆய்வாளர் 9498106525 மற்றும் அண்ணாமலைநகர் ஆய்வாளர் 9445779124 என்ற செல்போன் எண்களில் வாட்ஸ்அப் மூலமாகவும் தெரிவிக்கலாம் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் புகார்களை இரகசியமாக காக்கப்படும் சிதம்பரம் மேலவீதியில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது உடன் சிதம்பரம் ஆய்வாளர் ஆறுமுகம் அண்ணாமலை நகர் ஆய்வாளர் குணபாலன் உதவி ஆய்வாளர் நாகராஜன் சுரேஷ் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %