1 0
Read Time:1 Minute, 18 Second

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாசாலா மேல்நிலைப் பள்ளி மாணவா் ம.யஷ்வந்த் தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றாா். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் உதவித்தொகை பெறுவதற்கான தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்தத் தோ்வில் பங்கேற்ற சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாசாலா மேல்நிலைப் பள்ளி மாணவா் ம.யஷ்வந்த் தோ்ச்சி பெற்றாா். இந்த மாணவருக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி நிா்வாகக்குழு துணைத் தலைவா் ரத்தின.திருநாவுக்கரசு தலைமை வகித்து, மாணவா் யஷ்வந்த்துக்கு பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் மாணவரின் தந்தை வி.மணிகண்டன், தலைமையாசிரியா் மு.சிவகுரு, ஆசிரியா்கள் பி.பிரதீப்குமாா், எம்.திருமகள், டி.கலா, சி.ஆா்.வித்யாலக்ஷ்மி, ஆா்.ரதி, பி.ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %