0 0
Read Time:7 Minute, 50 Second

தூதுவளை (Thoothuvalai) என்பது இந்தியா போன்ற வெப்ப தன்மை கொண்ட நாடுகளில் காணப்படும் ஒரு மூலிகை தாவர வகையாகும். சொலனம் டிரைலோபேடம் என்பது இதன் அறிவியல் பெயராகும். இந்த தாவரம் வேலி அல்லது மற்ற செடி இனங்களைப் பற்றி கொடியாக படரும். தூதுவளை கொடி மற்றும் இலை ஆகிய அனைத்து பகுதிகளிலும் முட்கள் காணப்படும். தூதுவளை ஈரமான பகுதிகளில் புதர் மாதிரி வளர்ந்து காணப்படும். தூதுவளையின் இலை கரும்பச்சை நிறத்திலும் , பழங்கள் உருண்டை வடிவத்தில் சிவந்த நிறத்திலும் காணப்படும்.இதனுடைய பூக்கள் நட்சத்திர வடிவத்தில் ஊதா நிறத்தில் அழகாகக் காணப்படும். வெள்ளை நிற பூக்கள் கொண்ட தூதுவளை ரகமும் உண்டு. இந்த தூதுவளை (Thoothuvalai) கத்தரி குடும்பத்தைச் சேர்ந்தது.

சளி நீங்க:

மழை மற்றும் குளிர் காலங்களில் மனிதர்களுக்குப் பெரும் தொல்லையாக இருப்பது இந்த சளி தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளியால் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்படுகின்றனர். இந்த சளியோடு அழையா விருந்தாளியாக இருமல், மூச்சிரைப்பு, மூக்கடைப்பு போன்ற பல்வேறு மருத்துவ கேடுகளும் தொற்றிக் கொள்கின்றன. இதற்கெல்லாம் ஒரு அற்புத தீர்வாகத் தூதுவளை உள்ளது.

தூதுவளை கொண்டு ரசம் தயாரித்து, நோய் தாக்கம் ஏற்பட்டவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சளி , இருமல், மூக்கடைப்பு , மூச்சிரைப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளிலிருந்து எளிதாகக் குணம் அடைய முடியும். சளி மட்டுமில்லை காய்ச்சலுக்கும் தூதுவளை சிறந்த மருந்து தான். மேலும் உடல் வலிமை அடையும். படிக்க: பரவும் மர்மக் காய்ச்சல்! அறிகுறிகள் என்ன?
நினைவாற்றல்:

ஒரு குறிப்பிட்ட வயதில் அனைவருக்கும் ஞாபகம் மறதி ஏற்படுவது இயல்புதான் .இது போன்ற பிரச்சனைகள் வயதான காலத்தில் ஏற்படாமலிருக்கத் தூதுவளை துணைபுரிகிறது. தொடர்ந்து தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூளையில் உள்ள செல்கள் வலிமை அடையும். இதனால் மூப்பு அடைந்த காலத்திலும் நினைவாற்றல் குன்றாமல் இருக்கும். அதைப்போல குழந்தைகளுக்குத் தொடர்ந்து தூதுவளையை உணவில் சேர்த்து வர, அவர்களின் நினைவுத்திறன் அதிகமாகிப் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

எலும்பு வலுவடையும்:

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவு காணப்படுகின்றது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடையும். பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற தொல்லைகள் நீங்கும்.
சர்க்கரை நோய்:

இந்த தூதுவளை சர்க்கரை நோய்க்குச் சிறந்த மருந்து பொருளாக உள்ளது. இந்த தலை சற்று கசப்பு தன்மை கொண்டதாக இருக்கும்.இதனைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரத் தொடங்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த இலையைப் பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நல்ல பலனை அடைய முடியும்.
பித்தம் சம்பந்தப்பட்டப் பிரச்சனைகள் தீரும்

வாதம் மற்றும் பித்த பிரச்சனைகளால் பல்வேறு வியாதிகள் உடலில் ஏற்படும்.
இதற்குத் தூதுவளை மிகச் சிறந்த மருந்தாக உள்ளது. தூதுவளை பொடியை மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல ஆரோக்கிய முன்னேற்றம் கிடைக்கும்.

செரிமானம் சிறப்படையும்:

தூதுவளை செரிமான சம்பந்தமான கோளாறுகளை தீர்த்துவிடும். இது தூதுவளையின் மற்றொரு சிறப்பு. மேலும் ஜீரண சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு அவ்வப்போது துவையல் செய்து தரலாம்.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்:

உடலில் பல்வேறு தொற்று கிருமிகள் தாக்குவதற்கு எதிர்ப்புச் சக்தி குறைபாடு காரணமாக உள்ளது. இந்த வகையில் தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தியைப் பெற்றுவிடும். அதனால் பல்வேறு தொற்று வியாதிகள் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

  • தூதுவளை கொண்டு ரசம் தயாரித்து, நோய் தாக்கம் ஏற்பட்டவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சிரைப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளிலிருந்து எளிதாக குணம் அடைய முடியும்.
  • சளி மட்டுமில்லை காய்ச்சலுக்கும் தூதுவளை சிறந்த மருந்து தான். மேலும் உடல் வலிமை அடையும். தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூளையில் உள்ள செல்கள் வலிமை அடையும். இதனால் மூப்பு அடைந்த காலத்திலும் நினைவாற்றல் குன்றாமல் இருக்கும்.
  • தூதுவளை இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து, காயவைத்து, பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும் இதனைத் தொடர்ந்து மோரில் கலந்து சாப்பிட்டு வர இரத்த சிவப்பு அணுக்கள் விருத்தி அடைந்து, இரத்த சோகை நோய் தீர்ந்துவிடும்.
  • தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவு காணப்படுகின்றது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடையும். பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற தொல்லைகள் நீங்கும்.
  • இந்த தூதுவளை சர்க்கரை நோய்க்குச் சிறந்த மருந்து பொருளாக உள்ளது. இந்த தலை சற்று கசப்பு தன்மை கொண்டதாக இருக்கும்.இதனைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரத் தொடங்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த இலையைப் பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நல்ல பலனை அடைய முடியும்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %