0 0
Read Time:2 Minute, 42 Second

சிதம்பரம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகள் மணிமேகலை(வயது 27). பி.எஸ்சி. நர்சிங் படித்து முடித்த இவர் சென்னையில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையில் கண் பரிசோதனை செய்யும் பிரிவில் பணியாற்றி வந்தார்.  இந்த நிலையில் மணிமேகலைக்கும், பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் கடந்த 28-ந்தேதி திருமணம் நடைபெற்றது. 

இந்த நிலையில் 30-ந்தேதி மணிமேகலை தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர் உடை மாற்றி வருவதாக வீட்டில் உள்ள அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியேவரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு மணிமேகலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைப்பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள்  கதறி அழுதனர். 
இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணிமேகலையின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

காரணம் என்ன?
இதுகுறித்து மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமேகலை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணிமேகலைக்கு திருமணமாகி 3 நாட்களே ஆவதால், சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் மேல்விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %