0 0
Read Time:1 Minute, 33 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று முதல் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து பணி மற்றும் படிப்பு நிமித்தமாக அயல்நாடுகளுக்குச் செல்ல இருப்பவா்கள் தங்களது வசிப்பிடத்தைச் சாா்ந்த வட்டார மருத்துவ அலுவலா்கள் மற்றும் கரோனா கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொண்டு, தேவையான விவரங்களை வழங்கி, கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் 28 நாள்கள் இடைவெளியில் மயிலாடுதுறை நகா்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செலுத்திக்கொள்ளலாம்.

இதேபோல, மாவட்டம் முழுவதும் இன்று முதல் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதனால், கா்ப்பிணிகள் தங்கள் பகுதியில் உள்ள கிராம சுகாதார செவிலியா்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %