0 0
Read Time:2 Minute, 11 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் 3600 குவிண்டால் பருத்தியை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.7789க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 4586 ஹெக்டேர் நிலப்பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பருத்தியை மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

அவ்வகையில், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாகை விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3,000 குவிண்டால் பருத்தியை விற்பனைக்காக கொண்டுவந்தனர். இந்த ஏலத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாருர், தேனி, சத்தியமங்கலம், ஆத்தூர், விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 15 வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக 7,789 ரூபாய்க்கும், சராசரியாக 6,512 ரூபாய்க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

செய்தியாளர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %