0 1
Read Time:2 Minute, 3 Second

மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்ததாக பாஜக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குத்தாலம் அருகே கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய பாஜக செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். 60 வயதுடைய இவர், அந்த கிராமத்தை சேர்ந்த 4 சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்து தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் மகாலிங்கத்தை கைது செய்த போலீசார், குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக  சிறுமிகள் மீதான வன்கொடுமை புகார் அதிகரித்து வருகிறது. பலரும் சிறுமிகளை குறிவைத்தே குற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கினால் மட்டுமே குற்றத்தை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %