0 0
Read Time:1 Minute, 29 Second

சிதம்பரம் அருகே கரிக்குப்பம்  சி.புதுப்பேட்டையில உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ராஜேந்திரன் (வயது 50). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டுக்கு 7 வயது சிறுமி டி.வி. பார்க்க வந்து சென்றுள்ளார்.

இதை பயன்படுத்தி, ராஜேந்திரன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ச்சியாக வீட்டில் வைத்து அவர் இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். 
இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி, அவரது தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுபற்றி சிதம்பரம் அ னைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அக்னஸ் மேரி, சப்-இன்ஸ்பெக்டர் பொன் மகரம் ஆகயோர் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்.7 வயது சிறுமியை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %