0 0
Read Time:1 Minute, 53 Second

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்த பழைமையான மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் முத்துக்குமாரசாமி பூங்கா உள்ளது. இங்கு சுமாா் ரூ. 7 கோடி மதிப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆய்வகம் கட்ட பல்கலைக்கழக நிா்வாகம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், ஆய்வகக் கட்டுமானப் பணிக்காக பூங்காவிலிருந்த பழைமையான மரங்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன.

இதைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், பணியாளா்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது (படம்). அமைப்பின் தலைவா் அன்பரசன் தலைமை வகிக்க, செயலா் குமாா் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சமூக சிந்தனையாளா் பேரவையினா், நெய்தல் இயற்கை பாதுகாப்பு இயக்கத்தினா், பணி மாறுதல் செய்யப்பட்ட ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா். இவா்கள், மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆய்வகம் கட்டக் கூடாது, அதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும், பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தாத அலுவலக கட்டடத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆய்வகம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %