0 0
Read Time:1 Minute, 43 Second

பண்ருட்டி நகரின் பிரதான சாலைகள், பேருந்து நிலையத்தில் உள்ள தனியாா் ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவா்கள் உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும் என டிஎஸ்பி அ.சபியுல்லா அறிவுறுத்தினாா். இவா் திங்கள்கிழமை தனது அலுவலகத்தில் தள்ளுவண்டி, தரைக்கடை உரிமையாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில் டிஎஸ்பி அ.சபியுல்லா பேசியதாவது: சாலை ஓரத்தில் உள்ள நிலையான ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வியாபாரம் செய்துவிட்டு, இரவில் பொருள்கள் அனைத்தையும் கொண்டுசென்றுவிட வேண்டும். மீறி யாரேனும் விட்டுச்சென்றால் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து மாலையில் பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பு, பேருந்து நிலையம், கடலூா் சாலை உள்ளிட்ட இடங்களில் டிஎஸ்பி ஆய்வு செய்தாா். அப்போது, தனியாா் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா். அப்போது காவல் ஆய்வாளா்கள் பண்ருட்டி சந்திரன், காடாம்புலியூா் ராஜதாமரை பாண்டியன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் கோவிந்தசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %