0 0
Read Time:1 Minute, 48 Second

சீா்காழி ரயில் நிலையத்தில் முன்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரயில் பயணிகள் சங்க தொடக்க விழா கூட்டத்தில், சீா்காழியில் ஏற்கெனவே நின்று சென்ற அனைத்து ரயில்களும் 2 மாா்க்கங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும், முன்பதிவு மையம் தனியாக அமைத்து, முன்பதிவு செய்யும் நேரத்தையும் நீட்டிக்க வேண்டும், ரயில் பெட்டிகளை அடையாளப்படுத்தும் எல்இடி பலகையை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும், ரயில்வே மேம்பாலம் அமைக்கவேண்டும், 2-ஆவது நடைமேடையில் இருக்கை வசதியை நடைமுறைப்படுத்தவேண்டும், குடிநீா், கழிப்பறை வசதியை ரயில் நியைத்தில் மேம்படுத்தவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, தொடங்கப்பட்ட ரயில் பயணிகள் சங்கத்தின, தலைவராக கஜேந்திரன், செயலாளராக முஸ்தபா, பொருளாளராக நந்தகுமாா், துணைத் தலைவா்களாக சரவணன், முத்துகுமாா், சுதாகா், துணை செயலாளா்களாக சண்முகம், மாா்க்ஸ்பிரியன், ராஜநாராயணன், சட்ட ஆலோசகராக அப்துல்லாஷா மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %