0 0
Read Time:1 Minute, 47 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தால பேரூராட்சியில் ராமாபுரம் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள கூட்டுறவு அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு பகல் நேரங்களில் பொதுமக்கள் பொருட்களை வாங்க அதிக அளவில் கூடுவது வழக்கம் இதுபோன்ற நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் நியாய விலை கடை கட்டிடத்தின் இணை கட்டடமாக பக்கத்திலிருந்த பழைய கட்டிடம் திடீரென மேற்கூரை சிறிதளவு பகுதி இடிந்து கீழே விழுந்தது இரவு நேரம் என்பதால் மக்கள் பொருட்கள் வாங்க அங்கு வரவில்லை இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது இந்த அங்காடி கட்டிடமும் இடிந்து விழுந்த கட்டிடமும் ஒரே காலத்தில் பல ஆண்டுகள் முன்பு கட்டப்பட்ட பழைய கட்டடமாகும். எனவே அங்காடி கட்டிடமும் சேதமடைந்து எந்த நேரமும் விழும் நிலையில் உள்ளது. மக்களின் உயிரை காப்பாற்ற உடனடியாக இந்த அங்காடியை மாற்று இடத்தில் புதிய கட்டிடத்தில் அமைத்து தருமாறு அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே அரசு இதனை பரிசீலனை செய்து மக்களுக்கு எவ்வித பாதகமும் இல்லாமல் அருகிலே புதிய கட்டிடத்தில் அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

செய்தி: ஜமால், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %