மயிலாடுதுறை மாவட்ட அமெச்சூர் கபடி கழக புதிய நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு கூட்டம் தரங்கம்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் சுப்ரமணியராஜா, கரூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கூட்டத்தில்மயிலாடுதுறை மாவட்ட தலைவராக ரஜினி, செயலாளரக ஹான்றிஸ் ,பொருளாளராக வெற்றிவேல் மற்றும் துணை தலைவர்கள், செயற்குழுஉறுப்பினர்கள், இணைச் செயலாளர்கள்,தேர்வு கமிட்டிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட கபடி சேம்பியன்சிப் போட்டி நடத்துவது குறித்தும்,கபடி அணியில் உள்ள அனைவருக்கும் வழங்குவது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் துறைகளிலும் கபடி வீரர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிட முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதாகவும் இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் அமெச்சூர் கபடி குழு நிர்வாகிகள், கபடி அணி வீரர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.