0 0
Read Time:2 Minute, 52 Second

மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் பகுதியில் அருண்குமார்(38) துர்கா தேவி(35) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது. மனைவி துர்கா தேவி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு சென்றுவிட்டதாகவும், பின்னர் வீட்டிற்கு வந்து அருண்குமார் இடம் உங்கள் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறி சண்டையிட்டு உள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துர்கா தேவி கணவன் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கணவன் மற்றும் மனைவி இருவரையும் போலீசார் விசாரணை செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணைக்காக இருவரும் நாளை வரும்படி கூறியிருந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் மின் விசிறியில் அரை நிர்வாணமாக தூக்கிட்டு துர்கா தேவி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த துர்கா தேவியின் உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் துர்கா தேவியின் உடலை போலீசார் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக துர்கா தேவியின் கணவர் அருண்குமார் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் போலீஸார் அருண்குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு அன்று இரவே மனைவி தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %