0 0
Read Time:2 Minute, 13 Second

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஷைன் லயன்ஸ் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

பன்னாட்டு லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பழனிவேந்தன் தலைமை வகித்தார், சாசன தலைவர் நந்தகுமார், நெறியாளர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ், மாவட்டத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் கலந்துகொண்டு
செம்பனார்கோவில் ஷைன் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தலைவர் சாம்ராட் டாக்டர் லயன் கே. பாலையா, செயலாளர் தனராஜ், பொருளாளர் சதீஷ் உள்ளிட்ட உறுப்பினர்களை பாராட்டி வாழ்த்துக் கூறி பேசினார்.ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் மற்றும் அரிசி காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு மக்களிடையே அவசியம் குடும்பத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் அவர் கூறினார்.கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், திமுக தெற்கு செயலாளர் அப்துல்மாலிக், ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %