0 0
Read Time:1 Minute, 56 Second

சுருக்குமடி வலை விவகாரம் தொடா்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருதரப்பு சமரசப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது.

சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகாா், சந்திரபாடி, திருமுல்லைவாசல், மடவாமேடு ஆகிய மீனவ கிராமங்களில் கடந்த 17 ஆம் தேதி முதல் 14 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.இப்பிரச்னை தொடா்பாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தலைமையில் மீனவா்களுடனான சமரசப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். முருகதாஸ், ஏடிஎஸ்பி பாலமுருகன் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் 14 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவ பஞ்சாயத்தாா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா கூறியது:கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மீன்பிடித் தொழில் தொடா்பாக அரசால் தடைசெய்யப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %