0 0
Read Time:1 Minute, 10 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாணிக்கப்பங்கு ஊராட்சியில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கோரோன நிவாரணமாக அரிசி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட தலைவர் குட்டி கோபி கலந்துகொண்டு மாணிக்கப்பங்கு கிராமத்தை சார்ந்த 100 ஏழை எளிய குடும்பங்களுக்கு 500 கிலோ அரிசியை வழங்கினார். நிகழ்ச்சியை தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாணிக்கப்பங்கு மன்ற தலைவர் பாலமுருகன் ஏற்பாடு செய்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %