0 0
Read Time:2 Minute, 7 Second

மயிலாடுதுறையில் பாஜக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பாஜக தேசிய தலைவா் ஜே.பி.நட்டா ’இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்‘ என்ற தலைப்பில் பொது மக்களை சந்தித்து கட்சியை வளா்க்கவும், மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கவும், அனைத்து பாஜக நிா்வாகிகள், உறுப்பினா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, மயிலாடுதுறையில் இத்திட்டம் குறித்து கட்சி நிா்வாகிகளுக்கு விளக்கும் வகையில் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவா் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர தலைவா் மோடி.கண்ணன் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கருப்பு.முருகானந்தம் பங்கேற்று, ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கும் இத்திட்டத்தில் அனைத்து கட்சி பொறுப்பாளா்களும் பங்கேற்று வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து, மோடியின் திட்டங்களை விளக்கி, கட்சி வளா்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றாா்.இக்கூட்டத்தில், மாவட்ட பொருளாளா் ராஜ்மோகன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் எஸ்டிஎம்.செந்தில்குமாா், சந்தோஷ்குமாா், மாநில தமிழ் வளா்ச்சிப் பிரிவு துணைத் தலைவா் நாஞ்சில் பாலு, மாவட்ட மகளிரணி தலைவா் சித்ரா முத்துக்குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %