0 0
Read Time:1 Minute, 39 Second

கன்னியாகுமரி மாவட்டம், மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளி முதுகலை தாவரவியல் ஆசிரியர் முனைவர் ஆ. கிங்சிலின் – அவர்களுக்கு கல்விச் செம்மல் விருது வழங்கப்பட்டது.

பசுமை வாசல் பவுண்டேசன், காருண்யா டிரஸ்ட் இணைந்து, இணையத்தில் நடத்திய பன்முக கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில், ஆசிரியர் பிரிவில் பங்கேற்று வெற்றிப் பெற்றதற்காக கல்விச் செம்மல் விருது வழங்கப்பட்டது. இதை போல், முதுகலை தாவரவியல் ஆசிரியர் முனைவர். ஆ. கிங்சிலின் கல்வி துறையில் சிறந்த ஆசிரியருக்கான விருது, கலைஞரின் முத்தமிழ் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இவர் கன்னியாகுமரி மாவட்ட நீட் தேர்வு வழிகாட்டியாகவும், அகில இந்திய வானொலி மற்றும் கல்வித் தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு பாடங்களை கற்று கொடுக்கும் ஆசிரியராகவும் உள்ளார். வெற்றி பெற்ற ஆசிரியருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இவரது திறமையும் சேவையும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மனதார பாராட்டி மகிழ்கின்றனர்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %