0 0
Read Time:2 Minute, 5 Second

கொள்ளிடம் அருகே திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புதுப்பட்டினம் ஊராட்சி மடவாமேடு நடுத்தெருவை சேர்ந்தவர் வீரத்தமிழன் மகன் விக்னேஷ்(வயது 26). மீனவரான இவருக்கும், இவரது உறவினரான பழையார் பகுதியை சேர்ந்த துர்கா(23) என்பவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. 

திருமணத்திற்கு பின்னர் மடவாமேடு பகுதியில் பாட்டி மாரியம்மாள், மற்றும் மனைவியுடன் வசித்து வந்த விக்னேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதனை அறிந்த அவரது தந்தை வீரத்தமிழன் இதுகுறித்து புதுப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டதால் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது தற்கொலைக்கு வேறு எதுவும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %