0 0
Read Time:1 Minute, 39 Second

IPL போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி நடக்கவுள்ள முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதவுள்ளன.

கடந்த ஏப்ரல்- மே மாதங்களில், இந்தியாவில் நடக்கவிருந்த IPL 14வது சீசன் கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர், மீதமுள்ள 31 போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்சில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என பி.சி.சி.ஐ., தெரிவித்தது. இந்நிலையில், தற்போது IPL போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ள முதல் போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதுகின்றன. ஏழு நாட்கள் தலா 2 போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி முதல் போட்டி மதியம் 3:30 மணிக்கும், 2வது போட்டி இரவு 7:30 மணிக்கும் துவங்கும். முதல் தகுதிச் சுற்று அக்டோபர் 10 ஆம் தேதி துபாயிலும், இரண்டாவது தகுதிச் சுற்று அக்டோபர் 13 ஆம் தேதி சார்ஜாவில் நடைபெறவுள்ளது. IPL இறுதி போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %