0 0
Read Time:1 Minute, 3 Second

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மலை கிராமங்களுக்கு நடந்தே சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

பெட்டமுகிலாலம் மலைக்கிராமத்தில் பழங்குடி மக்களை சந்தித்த அவர், குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து நடைபயணமாக 12 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதியில் சென்ற அமைச்சர், வழியிலுள்ள சிறு சிறு மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களிடையே வாழ்வாதாரம், தொழில் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

கொரோனா பாதிப்பு நிலவரம், சிகிச்சைக்கான வசதிகள் ஆகியவற்றையும் அமைச்சர் கேட்டறிந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %